CHANDRUPHYSICS

This is only for who are trying to develop their knowledge

Tuesday 6 December 2016

TNPSC Study Material

DOOZYSTUDY: TNPSC Study Material: Best Collections of Study Material DOOZYSTUDY X 10th Study Materials "Doozy Study Provides a clear and special Guidance for a...

HSC ALL SUBJECT STUDY MATERIALS

DOOZYSTUDY: HSC: Tamil Nadu 12th Study Materials - HSC (XII) Study Materials - All Subjects - State Board 12th Study Materials - XII Study Materials/Guidan...

10th Science Best Collections of Study Material

DOOZYSTUDY: 10th Science Best Collections of Study Material:  Best Collections of  Sslc Science  Study Material Sslc  Science   Tamil / English Medium Links 10th science Topper Complete Stu...

10th science 545 One Marks Questions Tamil Medium

DOOZYSTUDY: 10th science 545 One Marks Questions Tamil Medium: Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The Materials Given Here For Your Preparation To SSLC Public E...

Sslc Science Two Mark Question with Answer Tamil M...

DOOZYSTUDY: Sslc Science Two Mark Question with Answer Tamil M...: Sslc Science Two Mark Question with Answer Tamil Mediam Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Doozy...

Sslc Science One Mark Question with Answer Tamil ...

DOOZYSTUDY: Sslc Science One Mark Question with Answer Tamil ...: Sslc Science One Mark Question with Answer Tamil Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Doo...

Sslc Science One Mark Question with Answer Englis...

DOOZYSTUDY: Sslc Science One Mark Question with Answer Englis...: Sslc Science One Mark Question with Answer English Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . D...

SSLC Science ( Physics) Interior Questions

DOOZYSTUDY: SSLC Science ( Physics) Interior Questions: Sslc Science  Physics  Interior Questions ( 10 pages ) Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Doozy ...

SSLC Science ( Chemistry ) Interior Questions

DOOZYSTUDY: SSLC Science ( Chemistry ) Interior Questions: Sslc Science  Chemistry  Interior Questions ( 10 pages ) Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Dooz...

SSLC Science ( Biology ) Interior Questions

DOOZYSTUDY: SSLC Science ( Biology ) Interior Questions: Sslc Science  Biology  Interior Questions ( 10 pages ) Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Doozy ...

Sslc Science 165 One Mark Questions with Answer Ta...

DOOZYSTUDY: Sslc Science 165 One Mark Questions with Answer Ta...: Sslc Science One Mark Question with Answer Tamil Medium  All The Materials Given Here For Your Preparation To SSLC Public Exams Th...

Sslc Science 360 One Mark Questions with Answer En...

DOOZYSTUDY: Sslc Science 360 One Mark Questions with Answer En...: Sslc Science One Mark Question with Answer English Medium All The Materials Given Here For Your Preparation To SSLC Public Exams ...

Sslc Science 360 One Mark Questions with Answer En...

DOOZYSTUDY: Sslc Science 360 One Mark Questions with Answer En...: Sslc Science One Mark Question with Answer English Medium All The Materials Given Here For Your Preparation To SSLC Public Exams ...

Sslc Science Two Mark Question with Answer Tamil M...

DOOZYSTUDY: Sslc Science Two Mark Question with Answer Tamil M...: Sslc Science Two Mark Question with Answer Tamil Mediam Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students . Dooz...

10th science science problems with answer

DOOZYSTUDY: 10th science science problems with answer: 10th science science problems with answer Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The Materials Giv...

10th science science problems with answer

DOOZYSTUDY: 10th science science problems with answer: 10th science science problems with answer Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The Materials Giv...

10th science unit wise Questions Tamil Medium

DOOZYSTUDY: 10th science unit wise Questions Tamil Medium: 10th science unit wise Questions Tamil Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The Materials ...

10th science unit wise Questions English Medium

DOOZYSTUDY: 10th science unit wise Questions English Medium: 10th science science unit wise Questions English Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The ...

10th science unit wise Questions English Medium

DOOZYSTUDY: 10th science unit wise Questions English Medium: 10th science science unit wise Questions English Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The ...

10th science unit wise Questions English Medium

DOOZYSTUDY: 10th science unit wise Questions English Medium: 10th science science unit wise Questions English Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All The ...

10th science Topper Complete Study Material Englis...

DOOZYSTUDY: 10th science Topper Complete Study Material Englis...: 10th science Topper Complete Study Material English Medium Doozy Study Provides a clear and special Guidance for all 10th Students .All T...

SSLC Study Material

DOOZYSTUDY: SSLC Study Material: SSLC Question Papers- Tamil Nadu Samacheer Kalvi 10th Syllabus Blue Print - SSLC Question Papers -SSLC Question Banks with Answers-Tamil Na...

CHANDRUPHYSICS: LESSON 5 TM

CHANDRUPHYSICS: LESSON 5 TM

NMMS QUATION PAPERS

DOOZYSTUDY: NMMS: DOOZYSTUDY  Provides a clear and special Guidance for NMMS exam . This time our team has taken a keen effort to provide more study materia...

NMMS MAT previous year mental ability questions co...

DOOZYSTUDY: NMMS MAT previous year mental ability questions co...: NMMS MAT previous year mental ability questions NMMS MAT Question And Answers, NMMS MAT Question banks, NMMS MAT Study Materials, NMMS P...

Sunday 4 December 2016

LESSON 5 TM

LESSON 5 TM





THANKS TO PADASALAI.COM

LESSON 1 TM

LESSON 1 TM




THANKS TO PADASALAI.COM

LESSON 17 TM

LESSON 17 TM






THANKS TO PADASALAI.COM

LESSON 16 TM

LESSON 16 TM





THANKS TO PADASALAI.COM

LESSON 13 TM

LESSON 13 TM



THANKS TO PADASALAI 

LESSON 12 TM

LESSON 12 TM






THANKS TO PADASALAI.COM

LESSON 11 TM

LESSON 11 TM






THANKS TO PADASALAI.COM

LESSON 10 TM

LESSON 9 TM

LESSON 8 TM

LESSON 7 TM

LESSON 6

LESSON 4 TM

LESSON 3

SCIENCE LESSON 2 TM

Tuesday 20 September 2016

7 Most Extreme Laboratories on Earth

7 Most Extreme Laboratories on Earth 
1. The World’s Highest-Altitude Laboratory – International Space Station, Outer Space

2. The World’s Deepest Underground Laboratory – SNOLAB, Sudbury, Ontario, Canada
3. The World’s Largest Particle Physics Laboratory – CERN, Geneva, Switzerland and France border
4. The World’s Deepest Underwater Laboratory – The NOAA Aquarius Reef Base, Florida Keys National Marine Sanctuary, Florida, USA

5. The World’s Highest Terrestrial Laboratory – The Pyramid Laboratory, Sagarmatha National Park, Nepal

6. The World’s Hottest Temperature-Producing Laboratory – Brookhaven National Laboratory, Long Island, New York, USA
7. The World’s Coldest Physics Laboratory – IceCube Neutrino Observatory, Antarctica

பூமியின் தோற்றம்

பூமியின் தோற்றம்.

முதலில் அண்ட வெளியில் இருந்த அனைத்தும் வெப்பம் மிகுந்த ஒரு கோளமாக இருந்தது. திடீரென இது வெடித்த்போது பெரு வெடிப்பு நிகழ்ந்தது. அந்த நேரத்தில் பொருள் எதுவும் இருக்கவில்லை. ஒளி மட்டுமே இருந்தது.
ஒரு வினாடி முதல் 30 லட்சம் ஆண்டுகள் வரை - அண்ட வெளி குளிர்ச்சி அடைந்தபோது புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூட்ரான்கள் ஆகியவை தோன்றின. இவை ஒன்றிணைந்து முதல் அணுக்கள் உருவாகின. இவ்வணுக்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அணுக்களாக இருந்தன. சில லித்தியம் அணுக்களும் இருந்தன.
30 லட்சம் முதல் 200 கோடி ஆண்டுகள் வரை - ஈர்ப்பு விசை இந்த அணுக்களை பிரம்மாண்டமான வாயு மேகங்களாக ஆக்கியது. இவ்வாயு மேகங்கள் பின்னர் நட்சத்திர மண்டலங்களாயின. ஒவ்வொரு மண்டல்த்தின் உள்ளேயும் ஈர்ப்பு விசை செயல் பட்டு அணுக்களை மேலும் நெருங்கச் செய்து சிறு சிறு வாயு மேகங்களை உருவாக்கியது.
200 கோடி முதல் 500 கோடி ஆண்டுகள் வரை - இந்த வாயு மேகங்கள் சுருங்கியபோது அவற்றின் மையப்பகுதியிலிருந்த வெப்பம் உயர்ந்தது. ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியது. இதனால் மிகப் பெருமளவு வெப்பமும், ஒளியும் உண்டாயிற்று. அண்டவெளியின் முதல் நட்சத்திரங்கள் பிறந்தன. ஆனால் இந்த அற்புதக் காட்சியைக் காண ஒருவரும் இல்லை. உயிரினங்களைத் தோற்றுவித்த கார்பன், இரும்பு, ஆக்சிஜன் அணுக்கள் இன்னும் உருவாகவில்லை. அண்டவெளி எங்கும் ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே நிரம்பி இருந்தன.
700 கோடி ஆண்டுகள் - ஆனால் முதல் நட்சத்திரங்களிலிருந்த ஹைட்ரஜன் எரிந்த போது கார்பன், ஆக்சிஜன், இரும்பு ஆகியவை உருவாகின. அவை சூப்பர் நோவாக்களாக வெடித்த போது இந்த புதிய அணுக்கள் அண்ட வெளியெங்கும் சிதறி பரவின.
800 கோடி ஆண்டுகள் - ஈர்ப்பு விசையின் காரணமாக மீண்டும் இந்த அணுக்கள் ஒன்று திரண்டு வாயு மேகங்கள் ஆகின. இந்த வாயு மேகங்கள் சுருங்கவும், சுழலவும் வெப்பமடையவும் தொடங்கின.
1000 கோடி ஆண்டுகள் - இது போன்ற ஒரு வாயு மேகத்தின் மையப்பகுதியில் இருந்த ஹைட்ரஜன், திடீரென்று ஹீலியமாக மாறத் தொடங்கியது. இப்படியாக நமது சூரியன் பிறந்தது. சூரியனைச் சுற்றி வந்த வாயு மேகத்திலிருந்த அணுக்கள் ஒன்றிணைத்து சிறு கற்களாகின. அந்த சிறுகற்கள் ஒன்றிணைந்து சிறு பாறைகளாகின. அந்த சிறு பாறைகள் ஒன்றிணைந்து பெரும் பாறைகளாயின. அப்படி உருவான ஒரு பெரும்பாறைதான் பூமி. அது வளர்ந்த போதுதன் அருகில் இருந்த அனைத்து பாறைகளையும் தன்னிடத்தில் ஈர்த்துக்கொண்டது. இவ்விதமாக பூமி ஒரு வெப்பமிகுந்த மாபெரும் கோளகாக உருவாகி சூரியனைச் சுற்றி வந்தது. ஆரம்பத்தில் உருகிய எரிமலையாக இருந்த பூமி குளிர்ந்து அதன் மேற்பரப்பு திடப்பட்டு நிலப்பரப்பாகியது. பூமியில் விழுந்த நீர் பெருங்கடல்களாக உருவாயிற்று. இந்த அடிப்படை அணுவியல்  உயிர்களின் தோற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது..

கணிதக் கதைகள்: நட்புன்னா இப்படி இருக்கணும்!

கணிதக் கதைகள்: நட்புன்னா இப்படி இருக்கணும்!

.                                
இதை விளக்குவதற்கு நாம் 2500 ஆண்டுகள் முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் பைதாகரஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் நிகழ்வைக் காணலாம்.
எண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஓர் குழு அமைத்து மிகச் சிறப்பாக அதை விளக்கியவர் பைதாகரஸ். அக்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்பவர்களைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எனக் கருதினார்கள். எனவே, பைதாகரஸ் அவரது சீடர்களுடன் இரவில் ரகசியமாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். எண்களில் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த இக்குழுவினரே உலகப் புகழ் பெற்ற பைதாகரஸ் தேற்றத்தையும் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது.
இன்று பைதாகரஸ் தேற்றம் இல்லையென்றால் உலகில் எந்தக் கட்டிடத்தையும் துல்லியமாகக் கட்ட இயலாது. பிரமிடு போன்ற பிரம்மாண்ட சின்னங்களில்கூட இந்தத் தேற்றம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பைதாகரஸ், அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான மேதையாக திகழ்ந்தார். எண்களின் தந்தையாகவும் இன்று அவர் கொண்டாடப்படுகிறார்.
ஆனால், பைதாகரஸ் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம் “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.
நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என பைதாகரஸ் பதிலளித்தார். அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார்.
நட்புக்கு இலக்கணமான எண்கள்
“220, 284 ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்” என பைதாகரஸ் கூறினார். “நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார்.
குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய பைதாகரஸ், 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படி கூறினார். சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார்.
220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220
284 →1,2,4,71,142,284
இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி பைதாகரஸ் கூறினார். அதன்படியே செய்த நபர் சிறிது நேரத்தில் ஆச்சரியமடைந்தார். இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்? பைதாகரஸ் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது,
220 → 1+2+4+5+10+11+20+22+44+55-110=284
284 →1+2+4+71+142=284
இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவதும், அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது. 220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது. இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோ அதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என பைதாகரஸ் விளக்கினார்.
வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் “எண்களின் தந்தை” என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார். எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் பைதாகரஸ் புரிய வைக்கும் தத்துவமாகும்.
நட்பிலக்கண இணைகள்
நட்பின் பண்பை வெளிபடுத்தும் 220, 284 ஆகிய எண்களை நாம் ‘நட்பிலக்கண இணைகள்’ (Amicable Pairs) என அழைக்கலாம். இவ்விரு எண்கள் சிறிய அளவில் அமைந்த நட்பிலக்கண இணைகளாக அமைகின்றன. அதிவேகக் கணினியின் துணையுடன் இன்று நாம் கிட்டத்தட்ட 1.2 கோடி நட்பிலக்கண இணைகளை அறிவோம். பைதாகரஸ் கண்டறிந்த சிறிய நட்பிலக்கண இணைக்கு அடுத்த இணையான 1184, 1210 என்ற எண்களை நிக்காலோ பகணினி என்ற 15 வயது இத்தாலி மாணவர் 1866-ல் கண்டறிந்தார். இந்த நட்பிலக்கண இணையைப் பல கணித மேதைகள் தவறவிட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, இன்றும் மாணவர்கள் சரியான முறையில் சிந்தித்தால் பல கணித உண்மைகளைக் கண்டறிந்து உலகை பிரமிக்க வைக்கலாம் என இது உணர்த்துகிறது.
நட்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்த எண்களைக் கண்டு மகிழாதவர் இருக்க முடியுமா?
மாணவர்கள் நலம் கருதி...
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்.

CentumPoint: PG - COMPUTER TRAINING ENRICHMENT CONTENT

CentumPoint: PG - COMPUTER TRAINING ENRICHMENT CONTENT: COMPUTER SCIENCE   FOR --  PG   TAMIL FONTS https://drive.google.com/file/d/0BzrgEcbuPT9hNkYyVUo4bVdBN0U/view?usp=sharing TAM...

Monday 11 July 2016

Story

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Story

தமிழ்&ஆங்கில வழி}
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு
எடுத்துக் கொண்டிருக்கும்
போது ஒருவர் வந்து
அவருடைய நண்பரைப் பற்றி
ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , "
என் நண்பரைப் பற்றி என்னிடம்
கூற விரும்பினால் அதற்கு
முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என
பதில் இருந்தால் மட்டுமே
நீங்கள் அவரைப் பற்றி
கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை
கேட்டார்
"அவர் செய்த செயலை
நேரடியாகப் பார்த்துவிட்டு
தான் அவரைப் பற்றி
கூறுகிறாயா ?" என்று
கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அவரைப் பற்றிய நல்ல
விஷயத்தை
கூறப்போகிறாயா? " என்று
இரண்டாவது கேள்வியைக்
கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அந்த நண்பரைப் பற்றி என்னிடம்
கூறினால் யாராவது
பயனடைவார்களா......???" என்ற
மூன்றாவது கேள்வியைக்
கேட்டார்.
இதற்கும் இல்லை என்றே பதில்
வந்தது.
"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை
தயவு செய்து என்னிடம்
கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான
விவாதங்களையே
மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன்
வாயுவினால் நிரப்பப் பட்ட
பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ
பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக்
கொள்ளுங்கள்.....!!!
உலகில் சிறு தவறு கூட
செய்யாதவர்களே இல்லை.
மேலும் மன்னிக்க முடியாத
குற்றம் என்றும்
ஏதுமில்லை........!!!
எனவே,
வார்த்தைகளால் யாரையும்
பழிக்காதீர்கள்......!!!
வசவுகளால் இதயங்களை
கிழிக்காதீர்கள்.......!!!
நல்லுறவை வன்முறையால்
இழக்காதீர்கள்.......!!!
நட்புறவை இழிமொழியால்
துளைக்காதீர்கள்.......!!!
மனிதர்கள் ரத்தமும், சதையும்,vv
உணர்ச்சிகளாலும்
உருவாக்கப்பட்டவர்கள்.
நீங்கள் யாரையும் இழந்து
விடாதீர்கள்.........!!!

Story

*ஒரு குட்டிக்கதை*


ஒரு ஊரில்  தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே  அவரது  அடையாளம் ....

     வீதியில் அவரைக்  கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

 ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது  கூட உண்டு....

 ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார்....

 அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....

          அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து  , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....

 இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது.  இன்று  இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....

       " என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...

 அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

          வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...

       பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று  எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி   வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு  சொல்றாங்க ?  "

 இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
             "நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "

            இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
 இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....

  இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

          " எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

 அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம் .
          இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

         இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.  பண்டிதரின்  பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....

         கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை  வழித்தெடுத்து அவர் கையில்  கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....

                நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"

       இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
        நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ".  என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....

             நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....

          கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக்  கட்டினார்...

 நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.  இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....

உங்களில்   ஒருவன்...